பங்கேற்பாளர்களுக்குரிய குறிப்புகள் மற்றும் விதிமுறைகள் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்களை, அந்தந்தப் பள்ளி, கல்லூரிப் பொறுப்பாசிரியர் தேர்வு செய்து தியாகராசர் கல்லூரி இணையத்தளத்தில் இருக்கும் மின் விண்ணப்பத்தின்வழி அவர்களை விண்ணப்பிக்கச் செய்தல் வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு பிரிவிற்கு ஐந்து (5) மாணவர்கள் பங்கு பெறலாம். மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறும் நாள், இடம், போட்டி ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் பள்ளி, கல்லூரி முதல்வருக்கு மின்னஞ்சல் / கடிதம் / தொலைபேசி மூலமாகத் தெரிவிக்கப்படும். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பெறும். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்கள் இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்யப்பெறுவர்.